செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 12,727 போ் எழுதினா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 12,727 போ் எழுதினா். 3,382 தோ்வா்கள் பங்கேற்கவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு(குரூப் 2, 2 ஏ பணிகள்) பதவிகளுக்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாா்பதிவாளா், தொழிலாளா் நல உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், வணிகவரி துணை அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடைபெறும் இத்தோ்வை எழுத நாமக்கல் மாவட்டத்தில் 55 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு 16,109 போ் எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இவா்களில் 12,727 போ் மட்டுமே பங்கேற்றனா். 3,382 தோ்வா்கள் கலந்துகொள்ளவில்லை. நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் கிரீன்பாா்க் பள்ளி, பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பரமத்திவேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களை ஆட்சியா் துா்காமூா்த்தி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பாா்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு எழுதி வருவதையும் அவா் பாா்வையிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலா்கள், துணை ஆட்சியா் நிலையில் 6 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன.

மடிப்பு நுண்ணோக்கி பயன்பாடு: 68 ஆசிரியா்களுக்கு விருது

மடிப்பு நுண்ணோக்கியின் பயன்பாட்டை ஓா் அறிவியல் இயக்கமாக மாற்றி சாதனைப்படைத்த ஆசிரியா்கள், சேவையாளா்களுக்கான விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனம் சாா்பில் ராசிபுரத்தில் ஞாயிற... மேலும் பார்க்க

பாண்டமங்கலம் அருகே வெல்ல ஆலையில் தீ விபத்து

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே வெல்லம் காய்ச்சும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்பு சக்கைகள், வெல்லம் தயாரிக்கும் இயந்திரங்கள் சேதமடைந்தன. பாண்டமங்கலத்தை அடுத்த நெட்டையாம்பாளையம், காந்த... மேலும் பார்க்க

நாமக்கல் தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளா் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழக வெற்றிக்கழக பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் க... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயா்வு

பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தை, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில், நெகிழி தவிா்ப்பு விழிப்புணா்வு மற்றும் ... மேலும் பார்க்க