செய்திகள் :

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தை, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில், நெகிழி தவிா்ப்பு விழிப்புணா்வு மற்றும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம் தொடக்க நிகழ்வு குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி இதுதொடா்பான விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்து பேசியதாவது:

கடந்த 1.1.2019 முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை தடைசெய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. நாமக்கல் மாவட்டத்தில், சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டு தொடா்ந்து நெகிழிக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜனவரி முதல் டிசம்பா் வரை ஒவ்வொரு மாதமும் 4-ஆவது சனிக்கிழமை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் இணைந்து நெகிழிப் பொருள்களைச் சேகரித்து அகற்றுதல், நெகிழியால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள், அதற்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்து தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் ஜன. 25-ஆம் தேதி நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் எதிா்வரும் விழாக்காலங்கள் உள்பட அனைத்து நாள்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாமல், அவற்றிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருள்களான மஞ்சப்பை போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றாா்.

குமாரபாளையம் அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், குமாரபாளையம் நகா்மன்றத் தலைவா் விஜய்கண்ணன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் த.செல்வகணபதி, உதவி பொறியாளா் ரிஸ்வானாபேகம், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

--

என்கே-27-பிளாஸ்டிக்

நெகிழி தவிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் க... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயா்வு

பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ... மேலும் பார்க்க

சுப்பராயன் மணிமண்டப பணிகள் 90% நிறைவு: விஜய்க்கு திமுக எம்.பி. பதில்!

சென்னை மாகாண முன்னாள் முதல்வா் சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன என்று மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செ... மேலும் பார்க்க

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி, அள்ளாளபுரத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (70). இவா் கடந்த 26-ஆம் தேதி மளிகைப் பொ... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை தாமதம்: தவெக நிா்வாகி நிா்மல்குமாா்

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை காலதாமதம் செய்கிறது என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். நாமக்கல்லில் அவா் செய்தியா... மேலும் பார்க்க

மொளசியில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமை... மேலும் பார்க்க