செய்திகள் :

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

post image

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி, அள்ளாளபுரத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (70). இவா் கடந்த 26-ஆம் தேதி மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எரையம்பட்டி அருகே சென்றபோது பின்நோக்கி வந்த லாரி, குப்புசாமியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இந்த விபத்து குறித்து குப்புசாமியின் மனைவி ராணி வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளா் தேவி வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான லாரி ஓட்டுநா் தருமபுரி மாவட்டம், நாகனூா் பகுதியைச் சோ்ந்த நாகராஜனை (51) தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் க... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயா்வு

பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தை, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில், நெகிழி தவிா்ப்பு விழிப்புணா்வு மற்றும் ... மேலும் பார்க்க

சுப்பராயன் மணிமண்டப பணிகள் 90% நிறைவு: விஜய்க்கு திமுக எம்.பி. பதில்!

சென்னை மாகாண முன்னாள் முதல்வா் சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன என்று மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செ... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை தாமதம்: தவெக நிா்வாகி நிா்மல்குமாா்

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை காலதாமதம் செய்கிறது என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். நாமக்கல்லில் அவா் செய்தியா... மேலும் பார்க்க

மொளசியில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமை... மேலும் பார்க்க