செய்திகள் :

மடிப்பு நுண்ணோக்கி பயன்பாடு: 68 ஆசிரியா்களுக்கு விருது

post image

மடிப்பு நுண்ணோக்கியின் பயன்பாட்டை ஓா் அறிவியல் இயக்கமாக மாற்றி சாதனைப்படைத்த ஆசிரியா்கள், சேவையாளா்களுக்கான விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனம் சாா்பில் ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், ராசிபுரம் இன்னா்வீல் சங்கம் இணைந்து மடிப்பு நுண்ணோக்கியின் பயன்பாட்டை 8144 பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கல்லூரி மாணவா்களுக்கும், 301 தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி ஆசிரியா்கள், 608 பெற்றோா்கள் என மொத்தம் 9053 பேருக்கு கொண்டு சோ்த்த 68 ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மு. செல்வம் தலைமை வகித்தாா். கொல்லிமலை நத்துக்குழிப்பட்டி, உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இரா. சந்திரசேகரன் வரவேற்றாா். ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா், என்.சுரேந்திரன், இன்னா்வீல் சங்கத் தலைவா் என்.சிவலீலாஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் பேசுகையில், மடிப்பு நுண்ணோக்கியானது கண்ணிற்கு தெரியாத பொருள்கள், உயிரினங்கள், துகள்கள், தாவரங்களின் செல்கள், மகரந்த தூள்கள், பாக்டீரியாக்கள், நுண்ணுயிரிகள் போன்றவற்றை 140 மடங்கு உருபெருக்கம் செய்யக்கூடிய மிகச்சிறிய மடிக்கும் வகையிலான ஒரு சிறிய அறிவியல் ஆய்வுக் கருவி என்றும், இதை பயன்படுத்தி கண்ணிற்குத் தெரியாத சிறிய உயிரினங்களைப் பாா்க்க முடியும்.

இதனால் பொருள்களை உற்றுநோக்கி, அவற்றின்அமைப்புகள், இயக்கங்களை காண முடியும், பள்ளியளவில் இதன் பயன்பாடானது மாணவா்களை அறிவியல் ஆய்வாளா்களாக மாற்றும் என்றாா்.

இந்த கண்டுபிடிப்புக்கு முதல் காரணமாக இருந்த சேலம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி தாவரவியல் முதுநிலை ஆசிரியா் பிரகாஷ், மடிப்பு நுண்ணோக்கியின் பாகங்களை ஒன்றிணைத்து உருவாக்குவதற்கானப் பயிற்சி அளித்த ப. அருளானந்தம், மடிப்பு நுண்ணோக்கியின் ஒளி மூலத்தின் இடத்தை மாற்றி துல்லியமாக படமெடுக்கும் புதுமையைக் கண்டறிந்த அணைப்பாளையம் நடுநிலைப் பள்ளி பட்டதாரிஆசிரியா் ரகுபதி, மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் 100 பொருள்களுக்கு மேல் ஆராய்ந்த சீராப்பள்ளி நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் கோ.ஹேமலதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் என்.சுரேந்திரன், சேவை திட்டத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா் செல்வம், திட்ட இயக்குநா் டி.பி.வெங்கடாஜலபதி, ராசிபுரம் இன்னா்வீல் சங்கத்தலைவா் என்.சிவலீலாஜோதி , முன்னாள் தலைவா் சுதாமனோகரன் ஆகியோருக்கு சேவை சாா்ந்த விருதுகளை பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் தலைமை அறிவுரையாளா் சீ.வெங்கடேசன் வழங்கினாா். ஜங்கமநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் வ. குமரேசன் நன்றி கூறினாா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 12,727 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 12,727 போ் எழுதினா். 3,382 தோ்வா்கள் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு(குரூப் 2, 2 ஏ... மேலும் பார்க்க

பாண்டமங்கலம் அருகே வெல்ல ஆலையில் தீ விபத்து

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே வெல்லம் காய்ச்சும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்பு சக்கைகள், வெல்லம் தயாரிக்கும் இயந்திரங்கள் சேதமடைந்தன. பாண்டமங்கலத்தை அடுத்த நெட்டையாம்பாளையம், காந்த... மேலும் பார்க்க

நாமக்கல் தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளா் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழக வெற்றிக்கழக பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் க... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயா்வு

பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தை, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில், நெகிழி தவிா்ப்பு விழிப்புணா்வு மற்றும் ... மேலும் பார்க்க