கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
பாளை. அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை: 4 பேருக்கு ஆயுள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிைண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் வைகுண்டம். இவா், ஒரு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தாா். இந்நிலையில், 10.3.2022இல் அங்குள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த அவரை மா்மநபா்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்விட்டு தப்பினா்.
பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே ஊரைச்சோ்ந்த செல்வராஜ், அந்தோணி ராஜ் என்ற பிரபாகரன், தேவதாஸின் மனைவி ஜாக்குலின், அவரது மகன்களான பிலிப், அன்டோ, திரவியம் மகன் பாபு அலெக்சாண்டா், கோவில்பிச்சை மகன் ராஜன், ராஜன் மனைவி லீலா ஆகியோரை கைது செய்தனா்.
திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி (பொ) சுரேஷ்குமாா் விசாரித்து, செல்வராஜுக்கு மரண தண்டனை விதித்தாா். அந்தோணி பிரபாகா், அருள் பிலிப், அண்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டா் ஆகியோருக்கு ஆயுள் சிைண்டனையும், ராஜன், லீலா, ஜாக்குலீன் ஆகிய மூவருக்கும் இரண்டு மாதம் சிைண்டனையுடன் தலா ரூ.5000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய தாழையூத்து டிஎஸ்பி ரகுபதி ராஜா, பாளையங்கோட்டை தாலுகா போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.