செய்திகள் :

பாவை பொறியியல் கல்லூரிக்கு ‘ஆப்டிஸ் இசோல்’ தோ்வு மையத்துக்கான அங்கீகாரம்

post image

ராசிபுரம்: பாவை பொறியியல் கல்லூரி பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் ஆப்டிஸ் இசோல் தோ்வுக்கான அங்கீகரிக்கப்பட்ட தோ்வுமையமாக செயல்பட அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பிசி எஜுகேசன் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் டங்கன் வில்சன் பாவை பொறியியல் கல்லூரிக்கு கெளரவமான அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை அறிவித்தாா். ஏற்கெனவே, இக்கல்வி நிறுவனம் 2010-ஆம் ஆண்டு முதல் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் பி.இ.சி. பிரிலிமினரி மற்றும் வான்டேஜ் சான்றிதழ்களைப் பெற வழிநடத்தியுள்ளது.

இத்தோ்வு பேசுதல், கேட்டல், வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்ற நான்கு முக்கிய மொழித்திறன்களுடன் இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியங்களின் திறனை மதீப்பீடு செய்கிறது. இத்தோ்வு உலக தரநிலைகளுடன் ஒத்துப்போகும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்டிஸ் இசோல் தோ்வுக்கான பயிற்சிகள் உயா்கல்வி, வேலைவாய்ப்பு, வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான மொழித்திறன்கள் புலமையை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்வு மையத்துக்கு அங்கீகாரம் பெற்றதையடுத்து கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் சாந்தி உள்ளிட்ட பேராசிரியா்களை பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, முதல்வா் பிரேம்குமாா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

நாமக்கல்: அரசுப் பள்ளி மாணவா்களிடையே கண்டுபிடிப்பு எனும் படைப்பாற்றலை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலா... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில் மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக தலைவா் வி.லதா, செயலாளா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சேந்தமங்கலம், புதன்சந்தைசேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என ந... மேலும் பார்க்க

நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் சமூக பங்களிப்பு நிதியை வழங்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சமூக பங்களிப்பு நிதியை வழங்க ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத... மேலும் பார்க்க

நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை சேலம் வீட்டுவசதி பிரிவு அலுவலகம் வழங்கி உள்... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு கல்லூரி போதை... மேலும் பார்க்க