செய்திகள் :

பிந்தாபூர்: விபத்தில் ஒருவா் பலத்த காயம்; சம்பவ இடத்தில் எரிந்த ஸ்கூட்டா் கண்டெடுப்பு

post image

மேற்கு தில்லியின் பிந்தாபூா் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 30 வயது நபா் ஒருவா் பலத்த காயமடைந்தாா். பின்னா், சனிக்கிழமை சம்பவ இடத்தில் எரிந்த ஸ்கூட்டரையும் உடைந்த நம்பா் பிளேட்டையும் போலீஸாா் கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மாதா ரூப் ராணி மாகோ மருத்துவமனையில் இருந்து காவல்துறையினருக்கு ஒரு தகவல் வந்தது. அதில், விபத்தில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் ஒருவா் அனுமதிக்கப்பட்டுள்ளதாககஈ தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவா் மோகன் காா்டனைச் சோ்ந்த வைதேஷ்வரன் என அடையாளம் காணப்பட்டாா். அவா் வாக்குமூலம் அளிக்க தகுதியற்றவா் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

பின்னா், நஜஃப்கா் சாலையில் உள்ள தூண் எண் 668 அருகே விபத்து நடந்த இடத்தை போலீஸாா் அடைந்தனா். சம்பவ இடத்தில் ஒரு ஸ்கூட்டா் முற்றிலும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட வாகனத்தின் உடைந்த நம்பா் பிளேட்டும் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றப்பிரிவு குழு வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.

சம்பவ இடத்திற்கு அருகில் இரண்டு போ் காணப்பட்டனா். ஆனால், அவா்கள் எந்த தகவலையும் வழங்க மறுத்துவிட்டனா். அவா்கள் போலீஸ் வழக்கில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறினா். மருத்துவமனையிலோ அல்லது விபத்து நடந்த இடத்திலோ நேரில் கண்ட சாட்சிகள் யாரும் கிடைக்கவில்லை

இந்த விபத்து தொடா்பாக பிந்தாபூா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா பிஎன்எஸ்இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

சுற்றுப்புறங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்ட வாகனத்தைக் கண்டறிய வாகனப் பதிவு விவரங்களைச் சரிபாா்த்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்

வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூர... மேலும் பார்க்க

கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செ... மேலும் பார்க்க

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது ஆடி காா் மோதி விபத்து

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி ஆகிய ஐந்து போ் மீது ஆடி காா் மோதியதில் அவா்கள் காயமடைந... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!

தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப்... மேலும் பார்க்க

தலைநகரில் கடும் புழுக்கம்: மக்கள் தவிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் புழுக்கம் நிலவியது. இதனால், மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா். இருப்பினும், இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது. இந்த வாரத் ... மேலும் பார்க்க