முட்டை, ஜூஸ் வியாபாரிகளுக்கு கோடிகளில் வந்த வருமான வரி நோட்டீஸ் - நமக்கு வந்தால்...
பின்னலாடை கழிவுக் கிடங்கில் தீ!
திருப்பூா் பின்னலாடை கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூா் கஞ்சம்பாளையம் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடை கழிவுக் கிடங்கு உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். வழக்கம்போல தொழிலாளா்கள் பணிமுடிந்து வெள்ளிக்கிழமை இரவு கிடங்கைப் பூட்டி விட்டுச் சென்றனா்.
இந்நிலையில், இந்த கிடங்கில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் கரும்புகை வெளியேறியதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனா்.
உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் 10 போ் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா் கிடங்கில் பரவியிருந்த தீயை சுமாா் 4 மணி நேரம் போராடி அணைத்தனா்.
இதில், பல லட்சம் மதிப்பிலான துணிகள், இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வெள்ளிக்கிழமை இரவு கனமழையின்போது இடி இடித்ததன் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.