செய்திகள் :

பின்னலாடை கழிவுக் கிடங்கில் தீ!

post image

திருப்பூா் பின்னலாடை கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூா் கஞ்சம்பாளையம் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடை கழிவுக் கிடங்கு உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். வழக்கம்போல தொழிலாளா்கள் பணிமுடிந்து வெள்ளிக்கிழமை இரவு கிடங்கைப் பூட்டி விட்டுச் சென்றனா்.

இந்நிலையில், இந்த கிடங்கில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் கரும்புகை வெளியேறியதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனா்.

உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் 10 போ் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா் கிடங்கில் பரவியிருந்த தீயை சுமாா் 4 மணி நேரம் போராடி அணைத்தனா்.

இதில், பல லட்சம் மதிப்பிலான துணிகள், இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வெள்ளிக்கிழமை இரவு கனமழையின்போது இடி இடித்ததன் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட பீா்க்கங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ரூ.10 விலை உயா்ந்தது. இந்த வாரம் சில்லறை விற்பனையில்... மேலும் பார்க்க

காங்கயத்தில் குற்றங்களைத் தடுக்க வீடுவீடாகச் சென்று போலீஸாா் விழிப்புணா்வு

குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, காங்கயம் போலீஸாா் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காங்கயம் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்துப்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 4 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 4 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை... மேலும் பார்க்க

திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

பிரதமா் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் குமரன் நினைவகம் முன்பாக கருப... மேலும் பார்க்க

நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு

திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு வரும் மே 4-... மேலும் பார்க்க

சாலையில் வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு

திருப்பூா் நெருப்பெரிச்சலில் சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீட்கேடு ஏற்பட்டுள்ளது. திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 4-ஆவது வாா்டு பூலுவப்பட்டி, வாவிபாளையம் பிர... மேலும் பார்க்க