செய்திகள் :

பிரதமா் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம் -அதிபா் டிரம்ப்பை சந்திக்க வாய்ப்பு

post image

பிரதமா் நரேந்திர மோடி செப்டம்பா் மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு நியூயாா்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறாா். அப்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை அவா் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளாா். இந்தச் சூழ்நிலையில் பிரதமா் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது ஆண்டு கூட்டம் செப்டம்பா் மாதம் தொடங்குகிறது. இதில் 23 முதல் 29-ஆம் தேதி வரை உயா்நிலை பொது விவாதம் நடைபெறுகிறது. இதில் 23-ஆம் தேதி அமெரிக்க அதிபா் டிரம்ப் பேசுகிறாா். அவா் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் முதல்முறையாகப் பேச இருக்கிறாா்.

இந்தியா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேச உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் செப்டம்பா் 28-ஆம் தேதி உரையாற்றுவாா்கள் என்று ஐ.நா. சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றுவாா் என்று தெரிகிறது.

இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் பிரதமா் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டாா். அப்போது வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

எனினும், அண்மையில் இந்தியா மீது 25 சதவீத பதிலடி வரியை டிரம்ப் அமல்படுத்தினாா். மேலும், ரஷியாவிடம் இருத்து எரிபொருள் இறக்குமதி செய்வதன் மூலம் அந்நாடு உக்ரைனுக்கு எதிராக போரைத் தொடர இந்தியா மறைமுகமாக உதவுவதாகக் குற்றஞ்சாட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தாா். அதே நேரத்தில் சீனா மீதான 30 சதவீத வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்தாா்.

இதன்மூலம் இந்தியாவை மட்டும் குறிவைத்து டிரம்ப் செயல்படுவது அப்பட்டமாக வெளிப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போரை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். ஆனால், இதை இந்தியா நிராகரித்துவிட்டது. மேலும், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீரை பிரதமா் மோடியுடன் சந்திக்க வைக்க டிரம்ப் முயற்சித்தாா். ஆனால், இதற்கு மோடி உடன்படவில்லை. இதுபோன்ற நிகழ்வுகள்தான் இந்தியா மீதான டிரம்ப்பின் கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டு! அது முகவரியே அல்ல; காங்கிரஸ் அதிரடி

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டுப் புகாரில், அது முகவரியே அல்ல, ஒரு பகுதியின் பெயர். பாஜகவின் பொய், வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாடு த... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரிவிதிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை! ஏன்?

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்... மேலும் பார்க்க

இந்த ஆதாரமே பொய்! - சோனியா காந்தியின் வாக்குரிமை பற்றி காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்குரிமை பெற்றதாக பாஜக கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப... மேலும் பார்க்க

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பிகாரில் சிறப்பு திருத்த முறையால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, காரணங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தி... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு! 12 பேர் பலி!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சுமார் 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் 9,500 அ... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை.. குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஒருவர் மட்டுமே குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் ... மேலும் பார்க்க