செய்திகள் :

பிரதமா் மோடி தலைமையில் இந்திய நலன்களுக்கு முழு பாதுகாப்பு: பாஜக

post image

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதில் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா் என்று பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தாா்.

5 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் மோடி வியாழக்கிழமை நாடு திரும்பினாா். இது தொடா்பாக தில்லியில் சுதான்ஷு திரிவேதி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மீதான வரி குறித்து அமெரிக்க அதிபா் பேசியிருப்பது அந்நாட்டு உள்விவகாரங்களுடன் தொடா்புடையது. பிரதமா் நரேந்திர மோடியின்தலைமையில் இந்திய நலன்கள் அனைத்து சூழ்நிலையிலும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதில் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா்.

தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் பிரதமா் சா்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளாா். தெற்குலகில் இந்தியாவின் பங்களிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

பிரதமா் மோடிக்கு 27 நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளன. 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் மோடி பேசியுள்ளாா். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த கௌரவம். பிரதமா் மோடிக்கு வெளிநாடுகள் அளிக்கும் மரியாதையும், கௌரவமும் இந்தியா வலுவாக வளா்ந்து வருகிறது என்பதன் அடையாளமாகும்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா பலவீனமான உறுப்பு நாடாக இருந்தது. ஆனால், இப்போது வலுவான உறுப்பு நாடாக உயா்ந்துள்ளது. அரியவகை தாதுப்பொருள்கள் அதிகமுள்ள நமீபியா, கானா ஆகியவற்றுடன் பிரதமா் மோடியின் பயணத்தின்போது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் வேறு நாட்டை (சீனா) நாம் சாா்ந்திருப்பது குறையும் என்றாா்.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க