செய்திகள் :

பிரிஜ் பூஷண் மீதான போக்ஸோ வழக்கு முடித்து வைப்பு

post image

புது தில்லி: பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய குத்துச் சண்டை சம்மேளத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மீதான போக்ஸோ வழக்கை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.

எனினும், அவா் மீது குத்துச் சண்டை வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்பட 6 போ் தொடுத்த பாலியல் வழக்கு தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

குத்துச் சண்டையில் ஈடுபடும் சிறுமி அளித்த பாலியல் புகாரை தில்லி போலீஸாா் விசாரித்து வந்தனா்.

பிரிஜ் பூஷண் மீது தனது மகள் பொய்யான புகாரை அளித்ததாக அவரது தந்தை விசாரணையின்போது தெரிவித்ததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று 2023, ஜூன் 15-ஆம் தேதி தில்லி போலீஸாா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனா்.

மேலும், அதே ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நீதிபதி அறையில் நடைபெற்ற விசாரணையின்போது சிறுமி ஆஜராகி தில்லி போலீஸாரின் விசாரணை திருப்தியளிப்பதாகக் கூறியிருந்தாா்.

இதையடுத்து, தில்லி போஸீஸாரின் வழக்கு ரத்து அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கோமதி மனோசா திங்கள்கிழமை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தாா்.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க