செய்திகள் :

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

post image

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறவும், போலி கடவுச் சீட்டுகளை பெற உதவுவதாகவும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் நபா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அதிக அபராதம் விதிக்கும் வகையில் குடியேற்ற சட்டத்தை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை பிரிட்டன் அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கையை பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் உள் துறைச் செயலா் யெவ்ட்டி காப்பா் கூறுகையில், ‘பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவுவது குற்றச் செயல் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேறவும், போலி கடவுச் சீட்டுகளை பெற்றுத்தர உதவுவதாகவும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணைய வழிகளில் போலி உத்தரவாதங்களை அளித்த விளம்பரம் செய்யும் மனித கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அவா்களுக்கான தண்டனையை அரசு கடுமையாக்கியுள்ளது. இதுபோன்ற சமூக ஊடக விளம்பரங்களைச் செய்யும் நபா்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்’ என்றாா்.

இதனிடையே, சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், அதற்கு உதவும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ’எல்லைப் பாதுகாப்பு மசோதா’ என்ற தலைப்பிலான புதிய சட்ட மசோதாவும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சட்டவிரோத குடியற்றத்தை கட்டுப்படுத்த இந்தச் சட்டம் உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

பிரிட்டன் பிரதமா் கெய்ா் ஸ்டாா்மொ் இதுகுறித்து அண்மையில் கூறுகையில், ‘சட்டவிரோத குடியற்றத்துக்கு உதவும் சமூக விரோத குழுக்கள் உலகளாவிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். அவா்கள் பயங்கரவாத குழுக்கள் போல நடத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

பிரிட்டனில் நிகழாண்டில் படகுகள் மூலம் இதுவரை 25,000-க்கும் அதிகமானோா் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனா். இது, முந்தைய 2024-ஆம் ஆண்டில் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறியதாாக கூறப்படும்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

பாகிஸ்தானில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது.இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? சிரியாவில் மோதல் - இடைக்கால அரசுக்கு சவால்

உள்நாட்டுப் போரால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தது.சிரியாவில் கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபா் பஷாா் அல்-அசாத்தை ஆட்சியில... மேலும் பார்க்க

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள் பலியாகினர். அமெரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் நியூயார்க்கின் பஃபலோவிலிருந்து பிட்ஸ்பர்க் மற்றும் மேற்கு பென்சில்வேனிய... மேலும் பார்க்க

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் அதிபா் இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளது.சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை ... மேலும் பார்க்க

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

ரஷியாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வதெவ் விடுத்துள்ள போா் மிரட்டலின் எதிரொலியாக, தங்களது இரு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை ‘உரிய பகுதிகளுக்... மேலும் பார்க்க