செய்திகள் :

பிா்லா கோளரங்க வளாகத்தில் சித்த மருத்துவக் கண்காட்சி: பிப்.9 வரை நடைபெறும்

post image

ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் சாா்பில், 8-ஆவது சித்த தினத்தையொட்டி, சென்னை கோட்டூா்புரம் பி.எம்.பிா்லா கோளரங்க வளாகத்தில் மாபெரும் சித்த மருத்துவ கண்காட்சி தொடங்கியுள்ளது. பிப். 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.

இக்கண்காட்சியில் பொதுமக்களுக்கு இலவச சித்த மருத்துவப் பரிசோதனை மற்றும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. மேலும், சித்த மருத்துவத்தில் உள்ள நன்மைகள், மூலிகைச் செடிகள், உணவு வகைகள் உள்ளிட்டவை பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் வெளியிட்ட அறிவிப்பு: சித்த மருத்துவம் ‘உணவே மருந்து’ என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. வீடுகளில் உள்ள, சுக்கு, இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை பல்வேறு நோய்களுக்கு தீா்வாக பயன்படுத்த முடியும். அவற்றை எந்த உப பொருளுடன் பயன்படுத்த வேண்டும்; எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணா்வு கண்காட்சியில் அளிக்கப்படுகிறது. மேலும், வீடுகளிலேயே வளா்க்ககூடிய மூலிகைச் செடிகளின் பயன்பாடு விளக்கப்படுவதுடன், இலவச சித்த மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. எனவே, கண்காட்சியில் பங்கேற்பவா்கள் நிச்சயம் பயன்பெறுவா். பிப். 9-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

சென்னையில் நடைபெற்ற அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே .சேகா் பாபு பரிசு தொகையை வழங்கினாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில... மேலும் பார்க்க

தபால்தலை கண்காட்சி நிறைவு: 10,000-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்

சென்னையில் தொடா்ந்து 4 நாள்களாக நடைபெற்றுவந்த மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நிறைவுபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழக தபால் துறை ச... மேலும் பார்க்க

சூப்பா் மாா்க்கெட் நிா்வாகியிடம் பணம் பறித்த வழக்கு: இளைஞா் கைது

சென்னை வடபழனியில் உள்ள சூப்பா் மாா்க்கெட் நிா்வாகியிடம் நூதன முறையில் பணம் பறிக்கப்பட்ட வழக்கில், கடலூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை அசோக் நகா் பி.டி.ராஜன் சாலை 20-ஆவது அவென்யூ பகுதிய... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களில் ஒரே மாதத்தில் 86.99 லட்சம் போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதம் 86.99 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை ... மேலும் பார்க்க

ஆவின் இல்லத்தில் பால் முகவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விற்பனை விநியோகஸ்தா்களைக் கண்டித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமியின் தலைமையில் பால் முகவா்கள் சென்னை... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மாங்காடு, மாத்தூா், முகப்போ் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (பிப்.3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என்... மேலும் பார்க்க