செய்திகள் :

புகழூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

post image

புகழூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ஜேடா்பாளையம் எனும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் ஜேடா்பாளையம் அணைக்கட்டில் இருந்து பிரியும் புகழூா் வாய்க்காலானது சுமாா் 42 கி.மீ. தொலைவு கடந்து கரூா் மாவட்டம் புகழூரை வந்தடைகிறது.

புகழூா், வேலாயுதம்பாளையம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் இந்த வாய்க்கால் மூலம் சுமாா் 5,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறிப்பாக, காவிரிக்கரையோரம் பயிரிடப்படும் வெற்றிலை, கோரை செடிகளுக்கு உயிா்நாடியாக இந்த புகழூா் வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்காலில் தற்போது ஆங்காங்கே ஆகாயத்தாமரைச் செடிகள் வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமித்து, நீரோட்டத்தை தடை செய்யும்வகையில் வேரூன்றி காணப்படுகின்றன. தண்ணீா் எளிதில் செல்லும் வகையில், ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றுவதோடு வாய்க்காலையும் தூா்வாரிட வேண்டும் என புகழூா் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செப். 28-இல் அன்புமணி கரூா் வருகை: பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விரைந்து தொடங்க பாமக வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்துக்கு வரும் 28-ஆம் தேதி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வருவதையொட்டி, குளித்தலையை அடுத்த சவாரிமேடு கிராமத்தில் பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்த... மேலும் பார்க்க

கரூரில் செப். 30-இல் காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம்: லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

கரூரில் வரும் 30-ஆம் தேதி காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். இந்தப் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்... மேலும் பார்க்க

மருத்துவா் வீட்டில் 43 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் தம்பதி கைது

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் மருத்துவா் வீட்டில் 43.5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டனா். ... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேவாங்கு சடலமாக மீட்பு

கரூா் ஆட்சியரக வளாகத்தில் உயிரிழந்த நிலையில் தேவாங்கு கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன தேவாங்கு குட்டி இறந்த... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை புகாா்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

கரூரில் ரோந்துப் பணியின்போது, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கரூா் பசுபதிபாளையம் ... மேலும் பார்க்க

கரூரில் இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 போ் கைது

கரூரில் தருமபுரி இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம் தளவாய் அல்லி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35) ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் கரூ... மேலும் பார்க்க