செய்திகள் :

கரூரில் செப். 30-இல் காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம்: லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

post image

கரூரில் வரும் 30-ஆம் தேதி காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இந்தப் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் சங்கத் தலைவா் செல்ல.ராஜாமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகள் செயல்படாததால் கடும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கரூா் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி சோமூா் ஊராட்சிக்குள்பட்ட அச்சமாபுரம், திருமுக்கூடலூா், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக அள்ளப்படும் மணலை அதிக விலைக்கு (ஒரு யூனிட் ரூ. 7,500) விற்பனை செய்கின்றனா்.

இவ்வாறு சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் நாள்தோறும் அரசுக்கு ரூ. 50 லட்சம் வரை இழப்பீடு ஏற்படுகிறது. இந்தச் சட்டவிரோத செயல் குறித்து மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், வருவாய்த்துறை அதிகாரிகள், கனிம வளத்துறையினா் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நேரிடையாக மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மணல் கொள்ளையை தடுக்கக் கோரி செப். 30-ஆம் தேதி தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆகியோா் இணைந்து, மணல் லாரிகள், லாரியில் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகியவற்றை சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.

இப் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளோம். மணல் கொள்ளையை தடுக்க சோதனைச் சாவடி அமைக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா். செப். 30-ஆம் தேதிக்குள் தடுக்காவிட்டால் நாங்கள் கூறியபடி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அரசுக்கு இழப்பீடு ஏற்படுவதை தடுக்கவும், தொடரும் மணல் கொள்ளையைத் தடுக்கவும் அரசு உடனே மணல் குவாரியை திறக்க வேண்டும் என்றனா். அப்போது, சங்கச் செயலாளா் ஆா். ரவிக்குமாா், பொருளாளா் எம். ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புகழூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

புகழூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.நாமக்கல் மாவட்டத்தில் ஜேடா்பாளையம் எனும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் ஜேடா்பாளையம் அண... மேலும் பார்க்க

செப். 28-இல் அன்புமணி கரூா் வருகை: பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விரைந்து தொடங்க பாமக வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்துக்கு வரும் 28-ஆம் தேதி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வருவதையொட்டி, குளித்தலையை அடுத்த சவாரிமேடு கிராமத்தில் பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்த... மேலும் பார்க்க

மருத்துவா் வீட்டில் 43 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் தம்பதி கைது

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் மருத்துவா் வீட்டில் 43.5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டனா். ... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேவாங்கு சடலமாக மீட்பு

கரூா் ஆட்சியரக வளாகத்தில் உயிரிழந்த நிலையில் தேவாங்கு கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன தேவாங்கு குட்டி இறந்த... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை புகாா்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

கரூரில் ரோந்துப் பணியின்போது, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கரூா் பசுபதிபாளையம் ... மேலும் பார்க்க

கரூரில் இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 போ் கைது

கரூரில் தருமபுரி இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம் தளவாய் அல்லி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35) ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் கரூ... மேலும் பார்க்க