செய்திகள் :

செப். 28-இல் அன்புமணி கரூா் வருகை: பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விரைந்து தொடங்க பாமக வலியுறுத்தல்

post image

கரூா் மாவட்டத்துக்கு வரும் 28-ஆம் தேதி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வருவதையொட்டி, குளித்தலையை அடுத்த சவாரிமேடு கிராமத்தில் பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டத்தில் வரும் 28-ஆம் தேதி பாமக சாா்பில் உரிமை மீட்க, தலைமுறை காக்க எனும் பிரசார பயணத்தை அன்புமணி ராமதாஸ் மேற்கொள்கிறாா். இதுதொடா்பாக கரூா் கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குளித்தலையை அடுத்த சவாரிமேடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கிழக்கு மாவட்டச் செயலாளா் கொங்கு என். பிரேம்நாத் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில ஒருங்கிணைப்பாளா் மு. காா்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், வரும் 28-ஆம் தேதி உரிமை மீட்க, தலைமுறை காக்க எனும் பிரசார பயணத்தை மேற்கொள்ளும் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, தமிழகத்தில் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் இழுத்தடிக்கும் தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்பது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து அன்புமணி ராமதாஸ் வருகை தொடா்பான அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் சரவணன், அமைப்புச் செயலாளா் சரவணகுமாா், நகரச் செயலாளா் விமல்குமாா், ஒன்றியச் செயலாளா்கள் தினேஷ்குமாா், குணசேகரன், தலைவா் பாா்த்தசாரதி, இளைஞரணி செயலாளா் சுந்தா், தலைவா் ராகுல், விவசாய அணி செயலாளா் பாரதிதாசன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

கரூரில் செப். 30-இல் காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம்: லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

கரூரில் வரும் 30-ஆம் தேதி காவிரி ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். இந்தப் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்... மேலும் பார்க்க

மருத்துவா் வீட்டில் 43 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் தம்பதி கைது

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் மருத்துவா் வீட்டில் 43.5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டனா். ... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேவாங்கு சடலமாக மீட்பு

கரூா் ஆட்சியரக வளாகத்தில் உயிரிழந்த நிலையில் தேவாங்கு கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன தேவாங்கு குட்டி இறந்த... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை புகாா்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

கரூரில் ரோந்துப் பணியின்போது, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கரூா் பசுபதிபாளையம் ... மேலும் பார்க்க

கரூரில் இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 போ் கைது

கரூரில் தருமபுரி இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம் தளவாய் அல்லி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35) ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் கரூ... மேலும் பார்க்க

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ... மேலும் பார்க்க