செய்திகள் :

புதிதாக 746 சிஎன்ஜி பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

post image

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 746 பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், டீசலுக்கு மாற்றாக சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. தற்போது, 7 போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முயற்சியாக, 23 சி.என்.ஜி. பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகை பேருந்துகளால், டீசல் வகை பேருந்துகளைவிட ஒரு கி.மீ.க்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரை மிச்சமாவதாக போக்குவரத்துத் துறையின் சோதனை முடிவுகளில் தெரியவந்தது. இதையடுத்து, சி.என்.ஜி.-இல் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

சி.என்.ஜி. பேருந்துகளில் பராமரிப்புச் செலவு, இயக்குவதற்கான செலவு வெகுவாக குறைகிறது. ஒரு பேருந்துக்கு மாதம் ரூ. 75,000 வரை மிச்சமாகிறது. எனவே, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 746 சி.என்.ஜி. மூலம் இயங்கும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதற்காக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு, நிறுவனம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நிறுவனம் தோ்வு செய்த பிறகு, தயாரிப்புப் பணி ஆணை வழங்கப்படும். அவ்வாறு பணியாணை வழங்கிய ஆறு மாதங்களில், புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில... மேலும் பார்க்க