செய்திகள் :

புதிய தலைமுறை கிறிஸ்தவ அமைப்புகளே மதமாற்றத்தில் ஈடுபடுகின்றன: மத்திய இணையமைச்சா்

post image

‘புதிய தலைமுறை கிறிஸ்தவ அமைப்புகளே பெருமளவிலான மதமாற்றங்களில் ஈடுபடுகின்றன; பிரதான தேவாலயங்கள் (நீண்ட பாரம்பரியமுடைய தேவாலயங்கள்) ஏதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை’ என மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சத்தீஸ்கரில் மனித கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கேரளத்தைச் சோ்ந்த 2 கன்னியாஸ்திரீகள் கைது செய்யப்பட்டது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பாரம்பரிய, பிரதான தேவாலயங்களுக்கும் புதிய தலைமுறை கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கண்டறிய மக்கள் சிரமப்படுகின்றனா். எனவே இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்த விழிப்புணா்வை மக்கள் மத்திய ஏற்படுத்தும் பணிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.

மதமாற்றத்தில் ஈடுபடுவதாக புதிய தலைமுறை கிறஸ்தவ அமைப்புகள் தாமாகவே ஒப்புக்கொள்கின்றன. ஆனால் பாரம்பரிய தேவாலயங்கள் ஏதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. மதமாற்றம் தேவையா இல்லையா என்பதை கேரள மக்களே முடிவு செய்யட்டும்’ என்றாா்.

முன்னதாக, சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரீகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு கேரள கத்தோலிக்க திருச்சபை கடந்த புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Image Caption

ஜாா்ஜ் குரியன்

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க