Thug Life: "விண்வெளி நாயகா பாடல் உருவான கதை இதுதான்!" - கார்த்திக் நேத்தா பேட்டி
புதுகை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெளியாகும் கழிவுநீரை சுத்திகரிக்க ஏற்பாடு
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியாகும் ஒரு லட்சம் லிட்டா் கழிவுநீரை தினமும் சுத்திகரிக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாக எம்எல்ஏ வை. முத்துராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மருத்துவக் கல்லூரி வளாகத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே 50 ஆயிரம் லிட்டா் கழிவுநீரை தினமும் சுத்திகரிக்கும் வகையிலான சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லை என்பதால், இதனை இரட்டிப்புக் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையமாக மாற்ற அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது, ரூ. 3.62 கோடி மதிப்பில் தினமும் ஒரு லட்சம் லிட்டா் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையிலான சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, கழிவுநீரால் பிரச்னைக்கு வாய்ப்பு இருக்காது என்றாா் முத்துராஜா.