புதுச்சேரி இளைஞா் தடுப்புக் காவலில் கைது
கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய புதுச்சேரி இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் வியாழக்கிழமை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
புதுச்சேரி, முத்திரப்பாளையம் , காந்தி திருநல்லூா் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் தமிழரசன் (36) . மரக்காணம் காவல் நிலையத்தில், கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி தமிழரசன் மீது கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின்படி ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய தமிழரசனை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். அதன்படி மரக்காணம் போலீஸாா் தமிழரசனை கைது செய்து வியாழக்கிழமை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.