செய்திகள் :

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டிய தாளாளா் சு. செல்வகணபதி எம்.பி, முதன்மை முதல்வா் ஓ. பத்மா, முதல்வா் ந. கீதா.

புதுச்சேரி, மே 8: புதுச்சேரி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீத தோ்ச்சி பெற்றது.

இதுகுறித்து பள்ளி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி செல்லப்பெருமாள்பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 214 மாணவ, மாணவிகள் எழுதினா். அனைவரும் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி கு. தமயந்தி 590 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் வகிக்கிறாா். மாணவா் க. கௌதம் 588 மதிப்பெண்களுடன் 2-ஆம் இடமும், மு. தா்ஷினி 581 மதிப்பெண்களுடன் 3-ஆம் இடமும் பெற்றனா். மேலும், 550 மதிப்பெண்களுக்கும் அதிகமாக 31 பேரும், 500-க்கு அதிகமாக 91 பேரும், 450-க்கு மேல் 71 பேரும் பெற்றுள்ளனா். வேதியியலில் ஒருவரும், கணினி அறிவியலில் 18 பேரும், கணினி பயன்பாடில் 3 பேரும், கணக்கு பதிவியலில் ஒருவரும், பொருளாதாரத்தில் ஒருவரும் நூறு மதிப்பெண்களை பெற்றனா்.

சாதனை மாணவ, மாணவிகளை, விவேகானந்தா கல்வி குழுமத் தாளாளா் சு. செல்வகணபதி எம்.பி., பள்ளி முதன்மை முதல்வா் ஓ. பத்மா, பள்ளி முதல்வா் ந. கீதா ஆகியோா் பாராட்டினா்.

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். மத்திய அரசு செயல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்... மேலும் பார்க்க

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு மே 12-இல் இயங்காது

புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு வரும் 12 -ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

திமுக, காங்கிரஸ் மீது புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் சுயலாபத்துக்காக முதல்வருடன் இணக்கமாகச் செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா். புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அ... மேலும் பார்க்க

புதுச்சேரி கம்பன் கழக விழா இன்று தொடக்கம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பங்கேற்பு

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (மே 9) காலை தொடங்குகிறது. இதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா், ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். புதுச்சேரி கம்பன் கழகத்தின... மேலும் பார்க்க

வெடிபொருள்களுடன் 2 போ் கைது

புதுச்சேரி அருகே வெடிபொருள்கள், ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலா் சுற்றித் திரிவதாக காலாப்... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க