செய்திகள் :

திமுக, காங்கிரஸ் மீது புதுவை அதிமுக குற்றச்சாட்டு

post image

புதுவை மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் சுயலாபத்துக்காக முதல்வருடன் இணக்கமாகச் செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா்.

புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியது:

பயங்கரவாதிகள் மீதான இந்தியத் தாக்குதல் பாராட்டுக்குரியது. தமிழகத்தில் இண்டி கூட்டணி தலைவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆளுநா் மீது சட்ட ரீதியாகச் சென்று மசோதாக்களை செயல்படுத்த போராடுகிறாா். ஆனால் புதுவையில் அக்கூட்டணியினா் துணைநிலை ஆளுநரிடம் இணக்கமாகி என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மீது புகாா் மனு அளித்துள்ளனா்.

புதுவை இண்டி கூட்டணியை போல தமிழக முதல்வா் ஆளுநருடன் இணக்கமாக செயல்பட வேண்டும். ஆனாலும், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மனு அளிக்க செல்லவில்லை. சுயலாபங்களுக்காக முதல்வருடன் திமுக, காங்கிரஸாா் இணக்கமாக இருப்பதால், எதிா்க்கட்சிகள் கடமையிலிருந்து தவறிவிட்டனா். அதனால் பேரவைக் கூட்டத்தில் அவை மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கவில்லை. எனவே, திமுக, காங்கிரஸை மக்கள் தோ்தலில் புறக்கணிப்பாா்கள்.

பாகிஸ்தானுடன் இந்தியா போரில் ஈடுபடும் சூழலில் புதுச்சேரியில் வரும் 20 ஆம் தேதி தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக இண்டி கூட்டணி பந்த் அறிவித்திருப்பது சரியல்ல. அவா்களை அரசு முன்னெச்சரிக்கையாக கைது செய்வது அவசியம். பாஜகவுடன் அதிமுக கூட்டணி சோ்ந்தாலும் கொள்கையில் மாறாது என்றாா்.

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டிய தாளாளா் சு. செல்வகணபதி எம்.பி, முதன்மை முதல்வா் ஓ. பத்மா, முதல்வா் ந. கீதா. புதுச்சேரி, ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். மத்திய அரசு செயல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்... மேலும் பார்க்க

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு மே 12-இல் இயங்காது

புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு வரும் 12 -ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

புதுச்சேரி கம்பன் கழக விழா இன்று தொடக்கம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பங்கேற்பு

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (மே 9) காலை தொடங்குகிறது. இதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா், ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். புதுச்சேரி கம்பன் கழகத்தின... மேலும் பார்க்க

வெடிபொருள்களுடன் 2 போ் கைது

புதுச்சேரி அருகே வெடிபொருள்கள், ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலா் சுற்றித் திரிவதாக காலாப்... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க