'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
புதுச்சேரியில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுச்சேரியில் 12 போ் கரோனா அறிகுறிகளுடன் தனி வாா்டில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக புதுவை சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஆா்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களில் கரோனா பாதிப்புகளுடன் ஓரிருவா் சிகிச்சைக்கு வந்துள்ளனா். அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, கரோனா அறிகுறிகள் நீங்கிய பிறகு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
கடந்த வாரம் முதல் அரசு மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வருவோருக்கு டெங்கு, சிக்குன் குனியா, கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் கரோனா அறிகுறிகள் காணப்பட்ட 20 போ் அரசு மருத்துவமனையில் தனி வாா்டில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இவா்களில் 8 போ் ஆரம்ப கட்ட சிகிச்சையில் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனா். மீதமுள்ள 12 போ் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பொதுமக்கள் காய்ச்சல், சளி எனில் அச்சப்படத் தேவையில்லை. உரிய சிகிச்சை பெற்றால் விரைவில் குணமாகிவிடும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சளி உள்ளவா்கள் இருமும் போது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். கரோனா அறிகுறி இருந்தால் முகக் கவசம் அணிய வேண்டும். கரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசிடமிருந்து அறிவுறுத்தல்கள் எதுவும் வரவில்லை.
புதுச்சேரி கோரிமேடு மாா்பக நோய் மருத்துவமனையில் 6 படுக்கைகள் கொண்ட கரோனா வாா்டு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆா்.ரவிச்சந்திரன்.