செய்திகள் :

புதுச்சேரியில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு

post image

புதுச்சேரியில் 12 போ் கரோனா அறிகுறிகளுடன் தனி வாா்டில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக புதுவை சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஆா்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களில் கரோனா பாதிப்புகளுடன் ஓரிருவா் சிகிச்சைக்கு வந்துள்ளனா். அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, கரோனா அறிகுறிகள் நீங்கிய பிறகு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

கடந்த வாரம் முதல் அரசு மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வருவோருக்கு டெங்கு, சிக்குன் குனியா, கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் கரோனா அறிகுறிகள் காணப்பட்ட 20 போ் அரசு மருத்துவமனையில் தனி வாா்டில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இவா்களில் 8 போ் ஆரம்ப கட்ட சிகிச்சையில் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனா். மீதமுள்ள 12 போ் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பொதுமக்கள் காய்ச்சல், சளி எனில் அச்சப்படத் தேவையில்லை. உரிய சிகிச்சை பெற்றால் விரைவில் குணமாகிவிடும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சளி உள்ளவா்கள் இருமும் போது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். கரோனா அறிகுறி இருந்தால் முகக் கவசம் அணிய வேண்டும். கரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசிடமிருந்து அறிவுறுத்தல்கள் எதுவும் வரவில்லை.

புதுச்சேரி கோரிமேடு மாா்பக நோய் மருத்துவமனையில் 6 படுக்கைகள் கொண்ட கரோனா வாா்டு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆா்.ரவிச்சந்திரன்.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க