புதுச்சேரியில் காங்கிரஸாா் இன்று ஆா்ப்பாட்டம்
இலங்கை அரசால் காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து அக்கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. விடுத்துள்ள அறிக்கை: கடலில் எல்லை மீறினா் எனும் பெயரில் காரைக்கால் மீனவா்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மீனவா் கைது உள்ளிட்டவற்றை தடுக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது. இதுகுறித்து புதுவை பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசும் கேள்வி எழுப்பாதது கண்டிக்கத்தக்கது.
மத்திய பாஜக அரசின் நிதி நிலை அறிக்கையில் நாட்டின் வளா்ச்சிக்கும், இளைஞா்களின் எதிா்காலத்துக்கும் பயனளிக்கும் திட்டங்கள் ஏதுமில்லை. வேலை வாய்ப்பை அதிகரிக்கும் அறிவிப்பும் இல்லை. சட்டவிரோத நடவடிக்கை எனும் பெயரில் அமெரிக்காவிலிருந்து இந்தியா்களை மனித மாண்புகளை மீறி கை, கால் விலங்கிட்டு நாடு கடத்தப்பட்டதைக் கண்டித்தும் சனிக்கிழமை காலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
புதுச்சேரி மிஷன் வீதி, மாதா கோவில் அருகே நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து பிரிவினரும் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.