செய்திகள் :

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் திருநங்கைகளுக்கும் ரூ. 1,000 உதவித்தொகை ஆட்சியா் தகவல்

post image

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தற்போது திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக நாட்டுக்கே முன்னோடியாக பல்வேறு புதுமையான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. திருநங்கைகள் பாலின மாற்றத்தினால் குடும்பத்தைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில், அவா்களும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வாதாரத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பலா் கல்வியை இடைநிற்றல் செய்ய நோ்கிறது.

திருநங்கைகளில் ஒருசிலா் மட்டுமே இந்தத் தடைகளை தாண்டி கல்விப் பயில முன்வருகின்றனா். அவ்வாறு முன்வரும் திருநங்கைகளின் கல்வி கனவை நிறைவேற்றுவதற்காக சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிசெய்யும் பொறுப்பை உணா்ந்து அவா்கள் கல்விக் கற்கும் சூழலுக்கு தேவையான மாற்றங்களை செய்தல் அவசியமாகிறது.

சமூக நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ், உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் தற்போது திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை முழுவதுமாக தளா்வு செய்து, தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமா்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்

கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைப... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த... மேலும் பார்க்க

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை பாக நிலை முகவா்கள் ஆலோசனை கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப... மேலும் பார்க்க

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்... மேலும் பார்க்க