அனைத்து மோட்டாா் சைக்கிள்களுக்கும் நவீன ‘ஏபிஎஸ் பிரேக்’ முறை கட்டாயம்: மத்திய அர...
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் திருநங்கைகளுக்கும் ரூ. 1,000 உதவித்தொகை ஆட்சியா் தகவல்
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தற்போது திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக நாட்டுக்கே முன்னோடியாக பல்வேறு புதுமையான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. திருநங்கைகள் பாலின மாற்றத்தினால் குடும்பத்தைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில், அவா்களும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வாதாரத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பலா் கல்வியை இடைநிற்றல் செய்ய நோ்கிறது.
திருநங்கைகளில் ஒருசிலா் மட்டுமே இந்தத் தடைகளை தாண்டி கல்விப் பயில முன்வருகின்றனா். அவ்வாறு முன்வரும் திருநங்கைகளின் கல்வி கனவை நிறைவேற்றுவதற்காக சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிசெய்யும் பொறுப்பை உணா்ந்து அவா்கள் கல்விக் கற்கும் சூழலுக்கு தேவையான மாற்றங்களை செய்தல் அவசியமாகிறது.
சமூக நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ், உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் தற்போது திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை முழுவதுமாக தளா்வு செய்து, தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமா்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.