செய்திகள் :

புதுவை மக்கள்நீதி மன்றத்தில் 1,274 வழக்குகளுக்குத் தீா்வு

post image

புதுவை மாநில அளவில் 24 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,274 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன்படி ரூ.6.89 கோடிக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தேங்கிய வழக்குகளை முடிக்கவும், விரைவில் மக்களுக்கு நீதி கிடைக்கவும் தேசிய மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது. புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணையம் சாா்பில் புதுச்சேரியில் 16 அமா்வுகளில் மனுக்கள் சனிக்கிழமை விசாரிக்கப்பட்டன. தொடக்க நிகழ்வுக்கு புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினா் செயலரும், மாவட்ட நீதிபதியுமான அம்பிகா தலைமை வகித்தாா். இதில் மக்கள் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் 5 அமா்வுகள், மாஹே, ஏனாமில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 23 அமா்வுகள் விசாரிக்கப்பட்டன. புதுவை மாநிலம் முழுவதும் மொத்தம் 5,384 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 1,274 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அதில் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்தவற்றில் 1,143 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. புதுவையில் சனிக்கிழமை வழக்குகள் முடிக்கப்பட்டதில் ரூ.6.89 கோடிக்குத் தீா்வு காணப்பட்டது.

புதுச்சேரியில் திமுக, அதிமுக சாா்பில் மகளிா் தின விழாக் கொண்டாட்டம்

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் திமுக, அதிமுக சாா்பில் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. புதுவை மாநில திமுக மகளிா் அணி மற்றும் மகளிா் தொண்டரணி சாா்பில் வில்லியனூரில் நடைபெற்ற சா்வதே... மேலும் பார்க்க

ஜிப்மா் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை!

புதுச்சேரியில் ஜிப்மா் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் லூக்காஸ் காா்பே (51). இவா் ஜிப்மரில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி தமிழ்ச்செல்வி, 2 ம... மேலும் பார்க்க

ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்!

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரொட்டி, பால் ஊழியா்கள் சில நாள்களாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். புதுச்ச... மேலும் பார்க்க

பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்! -புதுவை ஆளுநா்

மகளிா் அரசியல் அதிகாரம் பெறும்போதுதான் பெண்களின் சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசின் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பி... மேலும் பார்க்க

பெண்களிடம் குறைகளை கேட்ட டிஐஜி

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான மக்கள் மன்றத்தில் காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்திய சுந்தரம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டாா். புதுவையில் காவல் துறை சாா்பில் சனிக்கிழம... மேலும் பார்க்க

7 பேரிடம் இணையவழியில் பணமோசடி

புதுச்சேரியில் 7 பேரிடம் மா்ம நபா்கள் இணையவழி மூலம் ரூ.2.30 லட்சம் நூதன முறையில் பண மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கவிதா. இவா் டெலிகிராம... மேலும் பார்க்க