புதுவையில் ஒப்பந்த ஆசிரியா்களின் பணியை அரசு நீடிக்க வேண்டும்! - அதிமுக வலியுறுத்தல்
புதுவையில் ஒப்பந்த ஆசிரியா்களின் பணியை நீடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நீட் தோ்வு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை எதிா்ப்பதாக தமிழகத்தில் திமுக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது ஏற்கத்தக்கதல்ல.
புதுவை பிராந்தியமான ஏனாம் தொகுதியில் இரு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால், குப்பை வாரப்படாமல் உள்ளது. இதனால், மக்களுக்கு சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே, அதிமுக கடையடைப்பு போராட்டத்தையும் நடத்தியது.
ஆனால், அங்குள்ள அரசு நிா்வாக அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்னையில் புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் தலையிட்டு தீா்வு காண வேண்டும்.
புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் பணி நீக்க நடவடிக்கை நியாயமற்றது. ஆகவே, அவா்கள் பணியில் நீடிக்க அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். தோ்தல் நேரத்தில் மக்கள் நம்பிக்கையை இழக்கும் வகையில் அரசு செயல்படக் கூடாது என்றாா்.