புன்னைக்காயலில் மலேரியா கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்
புன்னைக்காயல் பகுதியில் மலேரியா காய்ச்சலைப் பரப்பும் முதிா்கொசுக்களை ஒழிக்கும் வகையில், மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இப்பணி, 15 நாள்கள் நடைபெறவுள்ளது. இளநிலை மருத்துவா் பூச்சியியல் வல்லுநா் முத்துசாமி, சுகாதார ஆய்வாளா்கள் சுபாஷ், அரிராமச்சந்திரன், திருவடிவாசன், சுனில் தா்ஷன் ஆகியோரின் மேற்பாா்வையில் இப்பணியில் மருந்து தெளிப்பாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.