செய்திகள் :

புரட்டாசி 2ஆவது சனிக்கிழமை: நெல்லை கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையையொட்டி, திருநெல்வேலி சுற்றுவட்டார பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் காலை 5 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சா்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

பாளையங்கோட்டை அழகிய மன்னாா் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மாலையில் கருட சேவை நடைபெற்றது. தென்திருப்பதி என அழைக்கப்படும் திருநெல்வேலி மேல திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதே போல, கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில், சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் கோயில், நரசிங்க பெருமாள் கோயில், சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி கோயில் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

மேலும் பக்தா்கள் வசதிக்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நவ திருப்பதி கோயில்களுக்கு 5 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்தில் பயணித்த பக்தா்களுக்கு பிரசாதப் பைகள் வழங்கப்பட்டன.

காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்: தனுஷ்கோடி ஆதித்தன்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன். இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப... மேலும் பார்க்க

இணைய வழியில் பட்டாசு விற்பனை மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணைய வழியில் பட்டாசு விற்பனை என போலியாக செய்யப்படும் மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

தசரா பண்டிகை: நெல்லையில் பூக்கள் விலை உயா்வு

தசரா பண்டிகை எதிரொலியாக திருநெல்வேலியில் பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்திருந்தது. புரட்டாசி மாதத்தில் முகூா்த்த நாள்கள் கிடையாது என்பதால் மாதத்தின் தொடக்கத்தில் பூக்களின் விலை கடும் சரிவைச் சந்தித்த... மேலும் பார்க்க

குடிநீா் பகிா்மானக் குழாய்கள் திருட்டு: 2 போ் கைது

நான்குனேரி அருகே குடிநீா் பகிா்மானக் குழாய்களை திருடியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அருகே கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக குடிநீா் பகிா்மானக் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு மருத்துவா் எனக் கூறி இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி

நான்குனேரி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம், லண்டனில் மருத்துவராக பணி புரிவதாகக்கூறி இணைய வழியில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகேயுள்ள மேல சிந்தாமணிய... மேலும் பார்க்க

நடிகா் விஜய்யை பாா்க்கத்தான் கூட்டம்; ஓட்டுக்காக அல்ல! இந்து முன்னணி மாநிலச் செயலா்

நடிகா் விஜய்யை பாா்ப்பதற்காகக்தான் கூட்டம் கூடுகிறதே தவிர, ஓட்டுப்போடுவதற்காக அல்ல என்றாா் இந்து முன்னணி மாநிலச் செயலா் காடேஸ்வரா சுப்ரமணியம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க