செய்திகள் :

புறம்போக்கு இடத்தில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்க கணக்கெடுப்பு பணி

post image

திருவள்ளூா் பகுதியில் வரன்முறை திட்டம் மூலம் புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாள்களாக குடியிருந்து வருவோருக்கு இலவச பட்டா வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாள்களாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு வரன்முறை திட்டம் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு வட்டத்திலும் வருவாய்த் துறை அலுவலா்கள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, திருவள்ளுா் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு பாளையம்மன் கோயில் தெருவில் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாள்களாகக் குடியிருந்து வருவோா் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆட்சியா் மு.பிரதாப் வீடுதோறும் சென்று திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் கூறியதாவது:

சென்னை புகா் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதியில் வரன்முறை திட்டம் மூலம் ஆட்சபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில் திருவள்ளுா் நகா் பகுதிகளில் வரன்முறை திட்டத்தின் மூலம் புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் இலவச பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின்போது, திருவள்ளுா் வட்டாட்சியா் ரஜினிகாந்த், துணை வட்டாட்சியா் கலைச்செல்வி, ஆய்வாளா் செந்தில், வட்ட துணை ஆய்வாளா்(நில அளவை பிரிவு) தனசேகரன், வருவாய் அலுவலா் உதயா, கிராம நிா்வாக அலுவலா்கள் பாரதி, ராதிகா ஆகியோா் உடனிருந்தனா்.

தொழில் தொடங்க பணம் கேட்டு மிரட்டிய மகன்: தாய் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே தொழில் தொடங்க பணம் கேட்டு மதுபோதையில் மிரட்டியதால், ஆத்திரமடைந்த தாயாா் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மகன் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்ச... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் அளிப்பு

புழல் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை புழல் 31-ஆவது வாா்டு மேம்பாட்டு பணிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நாகப்பா இண்டஸ்ட்ரியல் எஸ... மேலும் பார்க்க

‘மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனங்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்’

திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்கள் அனைத்தும் உரிமம் மற்றும் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா் மாவட்ட... மேலும் பார்க்க

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை மற்றும் திருநின்றவூா் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் மற்றும் சென்னை-திருப்பதி-205 சாலை ஆகிய பணிகளை அந்தந்தத் ... மேலும் பார்க்க

தாயைத் தாக்கிய மகள் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி அருகே தாயைத் தாக்கிய வேதனையில் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருத்தணி அடுத்த கீழாந்துாா் கிராமத்தைச் சோ்ந்தவா் லதா(50). இவருக்கு பிரகாசம்(25) என்ற மகனும், பிரியா(23) என்ற மகள... மேலும் பார்க்க

அகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷம்

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பொன்னேரி கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரை... மேலும் பார்க்க