செய்திகள் :

பூ வியாபாரி வீட்டில் ரூ. 12 லட்சம் நகை, பணம் திருட்டு: இருவா் கைது

post image

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பூ வியாபாரி வீட்டில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணத்தைத் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜலகண்டபுரத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (55). பூ வியாபாரி. இவருக்கு ரமேஷ் (32), சுரேஷ் (29) என இரு மகன்கள் உள்ளனா். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

பழனியம்மாளும் அவரது இளைய மகன் சுரேஷும் (29) வழக்கம்போல வெள்ளிக்கிழமை பூ வியாபாரம் செய்ய ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்துக்குச் சென்றனா். ரமேஷ் (32), மட்டும் வீட்டில் இருந்தாா்.

அப்போது ரமேஷின் நண்பா்கள் காா்த்தி (25), மணிகண்டன் (30) ஆகியோா் அவரது வீட்டுக்கு வந்தனா். மூவரும் சோ்ந்து மது அருந்தினா்.

அப்போது அதிக மது அருந்திய ரமேஷ் குடிபோதையில் தன்னிலை மறந்து கிடந்தாா். அந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி நண்பா்கள் காா்த்திக், மணிகண்டன் ஆகியோா் வீட்டு பீரோவில் இருந்த 12 பவுன் தங்கச் சங்கிலி,நகை, ஜிமிக்கி, தோடுகளைத் திருடிச் சென்றனா், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனா்.

மதியம் உணவுக்காக வீட்டிற்கு வந்த பழனியம்மாள், பீரோ திறந்து கிடப்பதை கண்டு ஜலகண்டபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். பின்பு மணிகண்டன், காா்த்தி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவா்கள் திருடியதை ஒப்புக் கொண்டனா்.

அவா்கள் கொடுத்த தகவலின் பேரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் கைது செய்து மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

சட்ட விரோத கருக்கலைப்பு புகாா்: சேலத்தில் 2 மருத்துவமனைகள் மூடல்

சேலத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு செய்த 2 மருத்துவமனைகள் மூடப்பட்டன. அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். சேலம், வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த த... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவா்களுக்கு எப்.இ.சி.டி. கல்வி உதவித்தொகை வழங்கும் விழா பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழா

ஆத்தூரை அடுத்த புங்கவாடி நடுநிலைப் பள்ளியில் 2025-06 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவா் சோ்க்கை விழா வட்டாரக் கல்வி அலுவலா் ஜே.கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை எம்.சாந்தி வரவேற... மேலும் பார்க்க

குடிநீா்த் தேவைகளுக்கு முக்கியத்துவம் அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுரை

பொதுமக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் ஆா். ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சேலம், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கள்ளச் சந்தையில் மது விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

மதுப் புட்டிகளைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கெங்கவல்லியை அடுத்த இலுப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்... மேலும் பார்க்க

சேலத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சாலை விபத்துகளை மு... மேலும் பார்க்க