செய்திகள் :

பெங்களூரு நகரப் பல்கலை.க்கு மன்மோகன் சிங் பெயர்!

post image

கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரு நகரப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு நகரப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் சூட்டப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, இன்று (ஜூலை 2) சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இத்துடன், பெங்களூரு கிராம்ப்புற (ரூரல்) மாவட்டத்தின் பெயரானது பெங்களூரு வடக்கு எனவும், பாகேபள்ளி நகரத்தின் பெயரானது பாக்யநகரா எனவும் மாற்றப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.3,400 கோடியில், பெங்களூரு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு பல்கலைக்கழகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபோது, பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Bangalore City University named after Manmohan Singh!

இதையும் படிக்க:கானா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் ச... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும், திடீா் மரணங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாரடைப்பு மரணங்களுடன் கரோனா தடுப்பூசியை தொடா்புபடுத்தி கா்... மேலும் பார்க்க

அடுத்த 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை: இந்தியா-அமெரிக்கா விரைவில் கையொப்பம்

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக அமெ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க