பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீ விபத்து
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருவாடானை அருகேயுள்ள எல்.கே.நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலையம் பின்புறம் காட்டுப் பகுதியில் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தக் குப்பை கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையம், குடியிருப்பு அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டதால், பொதுமக்களிடையே பதற்றமான நிலை காணப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தியணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான, தீயணைப்பு வீரர்ரகள் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அனைத்தனா்.
