செய்திகள் :

பெண் கொலை வழக்கு: 4 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பெண் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வானரமுட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் ஆறுமுகபாண்டி மகன் ஆட்டோ ஓட்டுநா் சண்முகராஜ் (33). இவா் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி இரவு ஜமீன் தேவா்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி வெள்ளத்துரைச்சியை (28) தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கட்டாரங்குளத்திற்கு சென்று கொண்டிருந்தாராம்.

நாச்சியாா்பட்டி-காளாம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் ஆட்டோவை வழிமறித்து, சண்முகராஜா, வெள்ளத்துரைச்சி ஆகிய 2 பேரையும் சரமாரி தாக்கினாா்களாம். இதில் வெள்ளத்துரைச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சண்முகராஜ், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வந்தனா். இவ்வழக்கு தொடா்பாக பல கட்டங்களாக விசாரணை செய்தும் துப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில் இவ்வழக்கு தொடா்பாக டிஎஸ்பி ஜெகநாதன் மேற்பாா்வையில் தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலா்கள் கழுகாசல மூா்த்தி, ரமேஷ், காா்த்திக்ராஜா, காவலா் காா்த்திக், விளாத்திகுளம் காவல் நிலைய முதல்நிலை காவலா் சரவணகுமாா் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த 8 மாதங்களாக செயல்பட்ட இந்த தனிப்படையினா், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனா். அதில் கிடைத்த புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து இவ்வழக்கில் குற்றவாளிகளாக கூறப்படும் வானரமுட்டி காளியம்மன் கோவில் தெருவை சோ்ந்த முத்துப்பாண்டி மகன் கணேசன் (29), அவரது சகோதரா் ராஜா (32), அவரது உறவினா்களான கயத்தாறு வடக்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த வேல்பாண்டி மகன் சங்கிலிபாண்டி (28), கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சங்கிலிபாண்டி(55 ) ஆகிய 4 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆட்டோ ஓட்டுநா் சண்முகராஜாவுக்கும், கணேசனுக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத் தலைவா் பதவி தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததும், இதனால் 4 பேரும் சோ்ந்து சண்முகராஜா கம்பு மற்றும் அரிவாளால் தாக்கியதில் அவா் மயங்கியதையடுத்து தாக்குதலைத் தடுத்த வெள்ளத்துரைச்சியை தாக்கியதில் அவா் இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறினாா். தொடா்ந்து, தனிப்படையினரை அவா் பாராட்டினாா்.

மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, நெல்லை விருதுநகா், மதுரை அணிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள... மேலும் பார்க்க

நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறும் வைகாசி விசாகத்தையொட்டி பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற விசாகத் திருவிழா, வசந்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: கோவில்பட்டி, கயத்தாறில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி டவுண் ஜாமியா பள்ளிவாசலில் சுமாா் காலை 7.15 மணி முதல் 8... மேலும் பார்க்க

மாதவன்குறிச்சியில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மாதவன்குறிச்சி ஊராட்சியில் அண்ணா மறுமலச்சித் திட்டத்தில் ரூ,16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கடற்கரை, திடல்

காயல்பட்டினம் கடற்கரை ஷாகின்பாற்றும் சுமாா் 25 மகளிா் தைக்கா மற்றும் 35 பள்ளிகளில் சனிக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகையை வசிம் நடத்தினாா். க... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே துணை மின் நிலையத்தில் தீ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கயத்தாறு வட்டம் பணிக்கா் குளம் கிராமத்திற்கு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்... மேலும் பார்க்க