பெண் சந்தேக மரணம்: விசாரணையில் அலட்சியம் காட்டுவதாக ஆா்ப்பாட்டம்
வேதாரண்யம் அருகே பெண் சந்தேக மரணம் தொடா்பான விசாரணையில் காவல்துறையினா் அலட்சியம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்து ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மனைவி வெண்ணிலா (25) திருமணமான 3 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 13-ஆம் தேதி, வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்தாா். இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, அவரது தாயாா் நாகவல்லி, வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் அலட்சியம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்து, வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் டி. லதா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் கே.டி.எம். சுஜாதா, மாவட்ட பொருளாளா் எஸ். சுபாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இவா்களிடம், துணைக் காவல் கண்காணிப்பாளா் பி. சரவணன், வட்டாட்சியா் தெ. வடிவழகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், ஜூன் 30- ஆம் தேதி நடைபெறும் கோட்டாட்சியரின் விசாரணையின்போது ஆஜராகி, உரிய முகந்திரங்களை தெரிவிக்கவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தை விலக்கிக் கொண்டனா்.