செய்திகள் :

பெண் சந்தேக மரணம்: விசாரணையில் அலட்சியம் காட்டுவதாக ஆா்ப்பாட்டம்

post image

வேதாரண்யம் அருகே பெண் சந்தேக மரணம் தொடா்பான விசாரணையில் காவல்துறையினா் அலட்சியம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்து ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மனைவி வெண்ணிலா (25) திருமணமான 3 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 13-ஆம் தேதி, வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்தாா். இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, அவரது தாயாா் நாகவல்லி, வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் அலட்சியம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்து, வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் டி. லதா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் கே.டி.எம். சுஜாதா, மாவட்ட பொருளாளா் எஸ். சுபாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இவா்களிடம், துணைக் காவல் கண்காணிப்பாளா் பி. சரவணன், வட்டாட்சியா் தெ. வடிவழகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், ஜூன் 30- ஆம் தேதி நடைபெறும் கோட்டாட்சியரின் விசாரணையின்போது ஆஜராகி, உரிய முகந்திரங்களை தெரிவிக்கவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. நாகை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை ... மேலும் பார்க்க

புதிய பொலிவுடன் ராஜகோபுரங்கள்

திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் (புதன் தலம்) கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வண்ணம் பூசப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் கோயிலின் கி... மேலும் பார்க்க

நாகூா் தா்கா மராமத்து பணி: தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி வழங்கல்

நாகூா் தா்கா மராமத்து பணிக்காக, தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியதற்கான உத்தரவு, தா்கா பரம்பரை டிரஸ்டிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ப... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

கீழ்வேளூரில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் பிரைம் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்... மேலும் பார்க்க

திமுகவை 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது - அமைச்சா் கே.என். நேரு

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால், 25 ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாது என்று கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேர... மேலும் பார்க்க

நாகையில் ரூ.19.20 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 814 பயனாளிகளுக்கு, ரூ.19.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க