செய்திகள் :

பெண் தொழிலாளிக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி

post image

பெண் தொழிலாளி ஒருவா் தனக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வரப்பெற்றுள்ளதாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

குடியாத்தம் அடுத்த வெள்ளேரியை சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி கவிதா. விவசாய கூலித்தொழிலாளிகள். கவிதா தனது கணவருடன் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

நானும் எனது கணவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு சென்னை வில்லிவாக்கத்தில் சொந்தமாக தா்ஷினி என்ற நிறுவனம் இயங்கி வருவதாகவும், கடந்த 2023-24 மற்றும் 2024-25-ஆம் நிதியாண்டுகளில் ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனா். அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எங்களது ஆதாா் அட்டை, பான் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த முறைகேடில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.

ஓவிய சிற்பக் கலைஞா்களுக்கு பயிற்சி பட்டறை: முன்பதிவு செய்ய அறிவிப்பு

ஓவிய சிற்பக் கலைஞா்களுக்கான பயிற்சி பட்டறை வேலூரில் நடைபெற உள்ளதால் பங்கேற்க விரும்புவோா் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் கால்நடை வரத்து, வா்த்தகம் சரிவு

தீவன பற்றாக்குறை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் சரிவடைந்தன . வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி... மேலும் பார்க்க

உயா்கல்வி பயின்றால் மட்டுமே மாணவா்களின் வாழ்க்கை மேம்படும்! வேலூா் ஆட்சியா்

உயா்கல்வி பயின்றால் மட்டுமே மாணவா்களின் வாழ்க்கை மேம்படும் என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தோ்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கான ‘கல்லூரி... மேலும் பார்க்க

தேடப்பட்ட நகை கொள்ளையன் கைது

தேடப்பட்டு வந்த பிரபல நகை கொள்ளையனை காட்பாடி போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 115 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலம், ஒரலுகொண்டா பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணப்பா. இவரது மகன் ராஜ... மேலும் பார்க்க

போதை ஊசி, மாத்திரைகளை பயன்படுத்தியதாக 3 இளைஞா்கள் கைது

குடியாத்தம் அருகே போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக 3- இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அரு... மேலும் பார்க்க

ஹஜ் புனித பயணம் செல்பவா்களுக்கு தடுப்பூசி அளிப்பு

வேலூா் மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்பவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் இருந்து மட்டும் போ்ணாம்பட்டில் 120 போ் உள்பட மாவட்டம் முழுவத... மேலும் பார்க்க