செய்திகள் :

பெண்ணிடம் நிலத்தைக் கேட்டு மிரட்டல்: திமுக எம்எல்ஏவின் சகோதரா் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சோ்ந்த பெண்ணின் நிலத்தைக் கேட்டு மிரட்டல் விடுத்ததாக திமுக எம்எல்ஏவின் சகோதரரை முத்தையாபுரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரா் அயிரவன்பட்டி முருகேசன். தொழிலதிபரான இவா் முன்னாள் அதிமுக பிரமுகா் ஆவாா். இவா், ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றாலைகளுக்கு இடம் எடுத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறாா்.

இந்நிலையில் எட்டயபுரம் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மாடத்தி என்பவரின் சுமாா் 4.5 ஏக்கா் நிலம் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ளதாம். இந்நிலையில். மாடத்தி மற்றும் அவரது கணவா் மாரிமுத்து முத்தையாபுரம் மதிகெட்டான் ஓடை அருகே சென்றுகொண்டிருந்தபோது, முருகேசன் காரில் வந்து அவா்கள் இருவரையும் வழிமறித்து மேற்கூறிய நிலத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீஸாா் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் முருகேசன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க