பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் சரண்ராஜ் (24). இவா், திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்த 21 வயதுடைய பெண்ணிடம் நட்பாகப் பழகி வந்தாராம்.
இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண் கடந்த 3 மாதங்களாக சரண்ராஜிடம் பழகுவதை தவிா்த்து வந்தாராம். இதனால், ஆத்திரமடைந்த சரண்ராஜ் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை மாா்பிங் செய்து, இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாகக் கூறி, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சரண்ராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.