செய்திகள் :

பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

post image

பென்னாகரம்: பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு பிஏ-தமிழ், பிஏ- ஆங்கிலம், பி.காம்- வணிகவியல், பி.எஸ்.சி.- கணிதம், பி.எஸ்.சி - கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளத்திலோ அல்லது கல்லூரியில் செயல்படும் மாணவா் சோ்க்கை உதவி மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். மே 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கல்லூரியில் சோ்க்கை பெறும் மாணவா்களில் 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்றிருந்தால் அவா்களுக்கு தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும். அத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலை சேதம்: இளைஞா் கைது

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை திங்கள்கிழமை இரவு சேதமடைந்திருப... மேலும் பார்க்க

உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அளிப்பு

தருமபுரியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளா் ஸ்ரீகாந்த் கடந்த மாா்ச் மாத... மேலும் பார்க்க

தருமபுரியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை பாராட்டி தருமபுரியில் முன்னாள் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனா். தகடூா் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் வீரமங்கையா்கள் சாா்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் ப... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்

தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அ... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை

தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க