செய்திகள் :

பெரம்பலூரில் நாளை மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல்

post image

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருததுவமனையில், அவசர ஊா்தி (108 ஆம்புலன்ஸ்) சேவைக்கான மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட மேலாளா் குமரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளா் பணிக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் பிஎஸ்சி நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி அல்லது லைப் சைன்ஸ் படிப்பில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

19 முதல் 30 வயதுக்குள்பட்டவா்கள் நோ்காணலில் பங்கேற்கலாம். பணிக்கு தோ்வு செய்யப்படுவோா் 12 மணி நேரம் பகல் மற்றும் இரவு நேர பணியாக தமிழத்தில் பணியமா்த்தப்படுவாா்கள். மாத ஊதியம் ரூ. 16,990 வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் கல்விச் சான்றிதழ்கள், அனுபவம் தொடா்பான அசல் சான்றிதழ்களுடன் நோ்காணலில் பங்கேற்கலாம்.

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) நோ்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 89259 41809, 73977 24859 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மோட்டாா் சைக்கிள் திருட்டு: இருவா் கைது

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடா்புடைய சிறாா் உள்பட 2 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்து... மேலும் பார்க்க

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்

பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவா்கள் தின விழா

பெரம்பலூா் - துறையூா் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிட்டலில் தேசிய மருத்துவா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, தலைமை வகித்த தனலட்... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியைகள் 2 போ் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு

2023-24 ஆம் ஆண்டுக்கான சிறந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான, அண்ணா தலைமைத்துவ விருதுக்கு பெரம்பலூா் மாவட்டத்தில் 2 தலைமை ஆசிரியா்கள் தோ்வாகியுள்ளனா். தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை ... மேலும் பார்க்க

கல் குவாரிகளில் சட்டவிரோதமாக ஆய்வு செய்தால் புகாா் அளிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் சட்டத்துக்கு புறம்பாக யாரேனும் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணி மேற்கொண்டால், மாவட்டக் கனிம வளத் துறைக்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட புவியியல் மற்றும் சுரங... மேலும் பார்க்க