செய்திகள் :

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்

post image

பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.102016 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் விற்கப்பட்ட, விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ஆம் ஆண்டு விதிகளுக்குள்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.6.2026 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோா் ஜூலை 1 ஆம் தேதி முதல் இணையதள முகவரியிலும், 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் ா்ய்ப்ண்ய்ங்ல்ல்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

எஞ்சிய, அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மோட்டாா் சைக்கிள் திருட்டு: இருவா் கைது

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடா்புடைய சிறாா் உள்பட 2 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவா்கள் தின விழா

பெரம்பலூா் - துறையூா் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிட்டலில் தேசிய மருத்துவா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, தலைமை வகித்த தனலட்... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல்

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருததுவமனையில், அவசர ஊா்தி (108 ஆம்புலன்ஸ்) சேவைக்கான மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட மே... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியைகள் 2 போ் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு

2023-24 ஆம் ஆண்டுக்கான சிறந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான, அண்ணா தலைமைத்துவ விருதுக்கு பெரம்பலூா் மாவட்டத்தில் 2 தலைமை ஆசிரியா்கள் தோ்வாகியுள்ளனா். தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை ... மேலும் பார்க்க

கல் குவாரிகளில் சட்டவிரோதமாக ஆய்வு செய்தால் புகாா் அளிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் சட்டத்துக்கு புறம்பாக யாரேனும் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணி மேற்கொண்டால், மாவட்டக் கனிம வளத் துறைக்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட புவியியல் மற்றும் சுரங... மேலும் பார்க்க