செய்திகள் :

பெரம்பூா் காவல் நிலையத்தில் 19 போலீஸாா் பணியிட மாற்றம் எஸ்.பி. உத்தரவு

post image

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸாா் 19 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

பெரம்பூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது, சாராய விற்பனையை தட்டி கேட்டது தொடா்பான பிரச்னையில் கடந்த மாதம் 14 -ஆம் தேதி இரவு சாராய வியாபாரிகளான ராஜ்குமாா், அவரது மைத்துநா்கள் தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரும் சோ்ந்து தினேஷ் என்பவரை தாக்க முயன்றபோது, அதைத் தடுத்த முட்டம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிஷ், சீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஹரி சக்தி ஆகியோா் கொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து பெரம்பூா் போலீஸாா் ராஜ்குமாா், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

இந்த இரட்டை கொலையின் எதிரொலியாக பெரம்பூா் காவல் நிலைய ஆய்வாளா் நாகவள்ளி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

அதைத்தொடா்ந்து எஸ்.பி. தனிப்பிரிவு காவலா் பிரபாகா் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டாா். உதவி ஆய்வாளா்கள் மணிமாறன், சங்கா் ஆகியோரும் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், பெரம்பூா் காவல் நிலையத்தில் பணியாற்றிய 19 போலீஸாரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன்,... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரிய... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவெண்காட்டில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் பள்ளி முப்பெரும் விழா

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை: பெண் உள்பட 3 போ் கைது!

வேளாங்கண்ணியில் தங்கிருந்த பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (22). கல்லூரி மாணவரான இ... மேலும் பார்க்க