செய்திகள் :

பெரியகுளம்: எரிந்த நிலையில் கிடக்கும் பன்றிகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்; நகராட்சியில் தொடரும் அவலம்

post image

பெரியகுளம் நகராட்சி மொத்தம் 30 வார்டுகளைக் கொண்டது. நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்துக் கையாள்வதற்காக பெரியகுளத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் பெரியகுளம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி வாகனங்களில் எடுத்துச் சென்று உரக்கிடங்கில் கொட்டிக் குப்பைகளைத் தரம் பிரித்து வருகின்றனர்.

பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கிற்குப் பக்கத்தில் 500 குடியிருப்புகள் மற்றும் குழந்தைகள் பயிலும் பால்வாடி அமைந்துள்ளன. குப்பைக் கிடங்கில் குப்பைகளை எடுக்க வரும் மர்ம நபர்கள் சிலர் குப்பைகளுக்குத் தீ வைத்து விடுவதாகவும் இதனால் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கு
பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கு

இந்த நிலையில், "கடந்த சில நாட்களாக பன்றிகளுக்கு நோய்கள் பாதிப்பு ஏற்பட்டு இறந்து வருகின்றன. அப்படி இறந்த பன்றிகளை அதன் உரிமையாளர்கள் பெரியகுளம் நகராட்சி உரக்கிடங்கில் கொண்டு வந்து போட்டு விடுகின்றனர். குப்பைகள் தீ பற்றி எரியும் போது பன்றிகளும் சேர்ந்து எரிகின்றன. சில பன்றிகள் எரிந்த நிலையில் கிடப்பதைப் பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது" எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது போன்று அடிக்கடி இறந்த பிராணிகளின் உடல்களையும், பெரியகுளம் நகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் இறைச்சி கூடங்களில்  வெளியேற்றப்படும் கழிவுகளையும் இங்குக் கொட்டி விடுவதாகவும் இது பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

பன்றிகளின் உரிமையாளர்கள் யார் என அரசு அதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாகச் செயல்படுவதாகவும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடந்தால் பொதுமக்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நாய்க்குட்டி கடித்து கபடி வீரர் உயிரிழந்த சோகம்; ரேபிஸ் பாதிப்பால் கடும் துயரம்..

உத்தரப்பிரதேசத்தில் மாநில அளவில் கபடி வீரராக இருந்தவர் பிரிஜேஷ் சோலங்கி. இவர் அங்குள்ள புலந்த்ஷஹர் மாவட்டத்தில் இருக்கும் பரானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாக்கடையி... மேலும் பார்க்க