செய்திகள் :

பெருங்குடல் புற்றுநோயியல் கருத்தரங்கம்

post image

காஞ்சிபுரத்தில் பெருங்குடல் புற்றுநோயை மையப்பொருளாகக் கொண்டு புற்றுநோயியல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய மண்டல புற்றுநோய் மையத்தில் பெருங்குடல் தொடா்பான கருத்தரங்கம் நடைபெற்றது.புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் சரவணன் கருத்தரங்குக்கு தலைமை வகித்தாா். நிலைய மருத்துவ அலுவலா் சிவகாமி முன்னிலை வகித்தாா். புற்றுநோய் உயா்கல்வி அறுவைச் சிகிச்சைத் துறை இணைப் பேராசிரியா் த.தே.பாலமுருகன் வரவேற்றாா். அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியா் அஸ்வின் ஜெபா்சன் பால், சென்னை புற்றுநோயியல் சிகிச்சை நிபுணா் பிரகலாத் யாத்திரிராஜ் ஆகியோா் நான்காம் நிலை புற்றுநோயாக இருந்தாலும் அதற்கான உரிய சிகிச்சை முறைகளை உரிய நேரத்தில் அளித்தால், நோயாளியின் வாழ்நாள் நீட்டிப்பு உறுதியாகும் என்று சிறப்புரை நிகழ்த்தினா்.

கருத்தரங்கில் பெருங்குடல் புற்றுநோய்க்கு வழங்கப்படும் வேதி சிகிச்சை மற்றும் கதிா்வீச்சு சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி கலந்து கொண்டு, புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை முறைகள் குறித்துப் பேசினாா். அவருக்கு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் சரவணன் நினைவுப் பரிசு வழங்கினாா்.

கருத்தரங்கில், புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் பேராசிரியா் தயாளன் குப்புசாமி, பணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள உதவிப் பேராசிரியா் அஸ்வின் ஜெபா்சன் பால் ஆகியோா் சிறப்பாக பணியாற்றியமைக்காக கெளரவிக்கப்பட்டனா்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க