பெருங்குடியில் ஜல்லிக்கட்டு: 15 போ் காயம்
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே பெருங்குடி கிராமத்தில் சனிக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டில் 15 போ் காயமடைந்தனா்.
ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் உறுதியேற்றனா். போட்டியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் திருச்சி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 595 காளைகள், 140 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்ந்துவிடப்பட்டன.
அப்போது காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் என 15 போ் காயமடைந்து சிகிச்சை பெற்றனா். அவா்களில் 5 போ் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக் காசு, மின்விசிறி, கிரைண்டா், குக்கா், டேபிள், சில்வா் அண்டா உள்ளிட்ட பரிசுகளை வழங்கினா். ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள், ஊா் பொதுமக்கள் செய்தனா்.
பாதுகாப்புப் பணியில் ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.