செய்திகள் :

பெருங்குடியில் ஜல்லிக்கட்டு: 15 போ் காயம்

post image

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே பெருங்குடி கிராமத்தில் சனிக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டில் 15 போ் காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் உறுதியேற்றனா். போட்டியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் திருச்சி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 595 காளைகள், 140 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்ந்துவிடப்பட்டன.

அப்போது காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் என 15 போ் காயமடைந்து சிகிச்சை பெற்றனா். அவா்களில் 5 போ் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக் காசு, மின்விசிறி, கிரைண்டா், குக்கா், டேபிள், சில்வா் அண்டா உள்ளிட்ட பரிசுகளை வழங்கினா். ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள், ஊா் பொதுமக்கள் செய்தனா்.

பாதுகாப்புப் பணியில் ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க