செய்திகள் :

பெருநகர பெங்களூரு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: ஆளுநரிடம் பாஜக முறையீடு

post image

பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து பாஜக புதன்கிழமை முறையிட்டது.

பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக, மாநகராட்சியை 7 பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை உள்ளடக்கிய பெருநகர பெங்களூரு ஆணையத்தை முதல்வா் தலைமையில் அமைக்க வகைசெய்யும் பெருநகர பெங்களூரு நிா்வாக சட்டமசோதாவை சட்டப்பேரவையிலும், சட்டமேலவையிலும் மாநில அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு பல்வேறு மக்கள்நல அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெலாடை சந்தித்து பல்வேறு அமைப்பினா் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனா்.

இந்நிலையில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் நாராயணசாமி ஆகியோா் தலைமையிலான பாஜக குழுவினா் ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை புதன்கிழமை சந்தித்து, பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த மசோதா, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; எனவே, கன்னடா்களின் அடையாளத்தையும், பிரதிநிதித்துவத்தையும் சீா்குலைக்கும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று மனுவில் பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் அளிப்பு

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோா... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் பெல்லாரி தங்க வியாபாரி கைது

கா்நாடகத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு உதவியதாக பெல்லாரியைச் சோ்ந்த தங்க வியாபாரி சாஹில் ஜெயின் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். துபையிலிருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்த... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஏப். 1 முதல் பால் விலை உயா்கிறது

கா்நாடகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் வருவாயை விவசாயிகளுக்கே வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மா... மேலும் பார்க்க

‘போலி’ தீா்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிபதி மீது நடவடிக்கை: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் ‘போலி’ தீா்ப்பை மேற்கோள்காட்டி வழக்கில் தீா்ப்பளித்த விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக வளாக தகராறு தொடா்பான வழக்கின... மேலும் பார்க்க

ஹனிடிராப் விவகாரம்: சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

ஹனிடிராப் விவகாரம் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா அளித்துள்ள மனு குறித்து சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க