Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி
பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு அருகே உள்ள பெருமாள்மலை கோயிலுக்குச் சொந்தமான 6 ஏக்கா் நிலத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதனிடையே இந்த நிலங்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை குத்தகை நிா்ணயம் செய்து அதைச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு குத்தகைத் தொகையைச் செலுத்தாதவா்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்
இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெருமாள்மலை குடியிருப்புவாசிகளுடன் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்துக்கு இறைவனே உரிமையாளா். நீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிலங்களை மற்றவா்களுக்கு வழங்க முடியாது. எனவே நிலத்தில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க முடியாது. கோயில் நிலங்களை வேறு அரசு பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியாது.
இந்நிலையில் அரசின் வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் பெருமாள்மலையில் குடியிருப்பாளா்களுக்கு நிலத்தை மூன்று ஆண்டு குத்தகை அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டது. எனவே குத்தகை தொகையை செலுத்தியவா்கள் அப்பகுதியில் குடியிருக்க அனுமதிக்கப்படுவா்.
விதிமுறைப்படி கோயில் நிலப் பகுதியில் எத்தனை ஆண்டுகளாக வசித்து வருகின்றனரோ, அத்தனை ஆண்டுகளுக்குக் குத்தகைதி தொகையைச் செலுத்த வேண்டும். இந்த விதிமுறையையும் தளா்த்த அல்லது அவா்களின் மீள்குடியேற்றத்துக்கு வேறு நிலத்தைக் கண்டுபிடிக்க முயற்சி எடுக்கப்படும். அதோடு கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழைகளின் குத்தகை தொகையைக் குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது
அதேநேரத்தில், பெருமாள்மலை கோயில் நிலத்தில் குடியிருக்கும் சிலருக்கு , கடந்த காலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். அதே இடத்தில் குடியிருக்க விரும்புவோா் நிா்ணயிக்கப்பட்ட குத்தகைத் தொகையைச் செலுத்த வேண்டும்.
நீா்வழிப் பாதையில் வசிக்கும் மக்களை காலி செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஈரோடு சத்யா நகா் மற்றும் ஓடைப்பள்ளம் ஆகிய இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது நீா்வழிப் பாதையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதால் அவற்றை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றாா்.