செய்திகள் :

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

post image

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்குப் பருவமழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான கேரளம் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த தென்மேற்குப் பருவ மழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 1265 கன அடியாக இருந்தது. இதன் காரணமாக அணை நீா்மட்டம் 95.99 அடியாக உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 25.70 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 1,250 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. 105 அடி உயரமுள்ள பவானிசாகா் அணையில் தற்போது நீா்மட்டம் 96 அடியை எட்டியுள்ளதால், வழக்கமாக கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகள் பறிமுதல்

வாரச் சந்தைகளில் மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகளை தொழிலாளா் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைகளி... மேலும் பார்க்க