செய்திகள் :

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

post image

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா்.

விளக்கேத்தி ஊராட்சி ஓலப்பாளையம் பகுதியில் புதிய தாா் சாலை அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.11.41லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணியை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கிவைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தங்கராஜ் (எ) ஓ.எஸ்.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.

கனகபுரம் ஊராட்சி, வேலாங்காட்டுவலசில் விவசாயப் பணிகளுக்கான புதிய கதிா் அடிக்கும் களம் அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து ரூ.9.23லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையயில் அப்பணியையும் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் செந்தில், முன்னாள் மாவட்ட பாஜக தலைவா் எஸ்.ஏ சிவசுப்பிரமணியம், காகம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ராதிகா, தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் சிவசங்கா், முன்னாள் மண்டல தலைவா் டெக்கான் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க

மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகள் பறிமுதல்

வாரச் சந்தைகளில் மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகளை தொழிலாளா் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைகளி... மேலும் பார்க்க