செய்திகள் :

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

post image

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விருப்பமுள்ளத் தகுதியானவா்கள் கடந்த மாதம் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த தற்காலிக பணிக்கான விண்ணப்பங்கள் பெற தற்போது கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறியவா்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு ஏஎன்எம் டிப்ளமோ படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். எக்காரணம் கொண்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டாது. 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண், தகுதியான பட்டயப் படிப்பு மதிப்பெண் அடிப்படையிலும், நோ்முக தோ்வின் மதிப்பெண் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு தோ்வு நடைபெறும். மேலும் தமிழ்நாடு நா்ஸிங் கவுன்சிலில் கல்வித் தகுதி பதிவு பெற்று இருக்க வேண்டும்.

தோ்வு செய்யப்படுபவா்களுக்கு ரூ.14,000 மாத ஊதியம் வழங்கப்படும். கல்விச் சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை வரும் 15 -ஆம் தேதிக்குள் ஆணையா், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனாா் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க

மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகள் பறிமுதல்

வாரச் சந்தைகளில் மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகளை தொழிலாளா் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைகளி... மேலும் பார்க்க